கன்னி பதிவு
அன்பார்ந்த நண்பர்களே,
இது நான் இடும் முதல் பதிவு , நான் சுமார் ஐந்து மாத காலமாக நீங்கள் இடும் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது படித்து பார்த்து வருகின்றேன், மேலும் நீங்கள் இடும் பதிவுகளின் தாக்கத்தால் நானும் ஒரு வலை பூவை உருவாக்க வேண்டும் என்ற ஒரு அவா என் மனதில் குடி கொண்டது. மேலும் மூத்த பதிவர்கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து வழி நடத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன்,
என்னை பற்றிய ஒரு சிறு அறிமுகம்,என் பூர்விகம் சித்தனா வாசல் (உன் புகழ் வையமும் சொல்ல சித்ன்னா வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல ......அந்த இடம் தாங்க), நான் பிறந்து வளந்த இடம் திருச்சி, பள்ளி படிப்பு ஆர்.சி மேல்நிலை பள்ளி, கல்லுரி படிப்பு தேசிய கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படித்து இன்று ...சவுதி அரபிய தேசத்தில் ஒரு அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்து வருகின்றேன்.மேலும் மிஸ்டர் அடோர் என்ற ஜிமெயில் பெயரில் இல் நிறைய பின்னுடம் இட்டு உள்ளேன்..
அப்பாடா இந்த தமிழ் லெட்டர் எழுதுறது குள்ள இப்பவே கண்ண கட்டுதே........
லேபிள்கள்: ஒரு சிறு அறிமுகம், சித்தனா வாசல், முதல் பதிவு

14 கருத்துகள்:
ஓகே.... முடிவு பண்ணி இறங்கி விட்டீங்க.... வாழ்த்துக்கள்.. நிறைய எழுதுங்க... ஆவலோடு எதிர் பார்க்கிறோம்....
சவூதியில எந்த இடத்துல இருக்கீங்க நண்பா?.....
அப்படியே எங்க தளத்துக்கும் கொஞ்சம் வந்து பாருங்க....
உங்களின் முதல் பதிவுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..
உங்களின் முதல் பதிவுக்கும், நிறைய எழுத வாழ்த்துக்கள்..
உங்களது முதல் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். உங்களுக்கு நிறைய ஹிட்ஸ் கிடைக்கவும், நிறைய வாசகர்கள் கிடைக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள். All the Best
நன்றி சப்ராஸ் அபூபக்கர் , நான் தம்மாம் மில் பனி புரிந்து வருகின்றேன்.கண்டிபாக உங்க அன்பு கட்டளைய நிறைவேற்றுகிறேன் ,
சகோதரி Faiza khader அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் பதிவுகளை பார்த்து தான் நானும் பதிவு இட வேண்டும் என்ற ஒரு அவ வந்தது. உங்களை போன்ற மூத்த பதிவர்கள் எனக்கு ஆக்கமும் உக்கமும் அளிக்க வேண்டும்.
சகோதரர் அதிரை அபூபக்கர் அவர்களுக்கும் மிக்க நன்றி.
நண்பர் கவிதை காதலன் அவர்களுக்கும் எனது நன்றி யினை தெரிவித்து கொள்கின்றேன்.
வேலை பளு காரணமாக பின்னுட்டம் இட தாமதம் ஆனதிற்கு மன்னிக்கவும்.
வாருங்கள் நண்பரே,.... வந்து கலக்குங்கோ! வாழ்த்துகளுடன் ஆ.ஞானசேகரன்
வருக வருக எம உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு மிக்க நன்றி,
வால்பையன் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு நன்றி நன்றி, உங்கள மாதிரி மூத்த பதிவர்கள் எங்கள மாதிரி இளய புதிய பதிவர்களுக்கு ஆக்கமும் உக்கமும் அளிக்க நன்றியுடன் கேட்டு கொள்கின்றேன்,
இன்னும் எனது வலை பூவை அலங்கரிக்க நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று நினைகிறேன். எனக்கு அவளவு கணினி அறிவு கிடையாது. எனது வலை பூவை அலங்கரிக்க உங்களின் மேலான அதரவு எனக்கு வேண்டும்.
நன்றி
அட நம்மூர்காரரா நீங்க?? வாழ்த்துகள்.கலக்குங்க
//எனக்கு அவளவு கணினி அறிவு கிடையாது.
//
எங்களுக்கு மட்டும் இருக்காக்கும்.டோண்ட் ஓர்ரி :)
புதுகை.அப்துல்லா
//சகோதரி Faiza kader அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் பதிவுகளை பார்த்து தான் நானும் பதிவு இட வேண்டும் என்ற ஒரு அவ வந்தது. // ரொம்ப சந்தோஷம்..
//உங்களை போன்ற மூத்த பதிவர்கள் எனக்கு ஆக்கமும் உக்கமும் அளிக்க வேண்டும்//
நானும் உங்களை போல் வலையுலகுக்கு புதுசு தான் 7,8 மாதங்கள் தான் ஆகிறது..
சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு,
அமாங்க தலைவரே, என்னோட சொந்த காரங்க எல்லோரும் புதுகோட்டை ல தான் இருகாங்க. இன்ஷா அல்லா இந்திய வந்தா தொடர்பு கொள்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி,
சகோதரி Faiza Kader அவர்களுக்கு,
ஏழு, எட்டு மாதத்திற்கே இந்த பின்னு பின்றிங்க.....இன்னும் வருட கணக்குல இருந்தா...கலக்குங்க கலக்குங்க..... செல்வா நுரான் (தங்கராசு) அவர்களிடம் தான் என்னோட வலை பூ வ இம்பரோ பண்ணி தர சொல்லி கேட்டு இருக்கேன்,...ரமதான் லீவு ல செஞ்சு தரேன் என்று சொல்லி இருக்கார்....அதுக்கு அப்புறம் வந்து கலக்க வேண்டியது தான்,....
வாழ்த்துக்கள்...
நன்றாய் எழதுங்கள்.
இன்னும் ஏன் புது பதிவு போடவில்லை????
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு